Tuesday, April 14, 2009

சித்திரை திருநாளாம் ...

அவனியெங்கும் விழாகோலம் பூண...
நாடெங்கும் தோரணங்கள் தொங்க...
மக்கள் மனதில் இன்பம் வைகையாய் பெருக்கெடுக்க...
"புத்தாண்டு பட்டை" உடுத்தி புது பொலிவுடன் புறப்பட்டாள் தமிழ் தாய்...
இடையில் நின்றான் ... வழி மறித்தான்... மூத்த மகன்..
தமிழ் வீட்டின் "தற்சமய" தலைவன்... கருணா மைந்தன்...
பழுத்த குரலில் பறை அறைந்தான் ...
"பொங்கலுக்கு தான் புத்தாண்டு பட்டு,...
இன்று சித்திரை கண்டாங்கி போதும் !!" என்று ...
மனம் உடைந்தாள்... கதவடைத்தாள்...
காத்திருந்தாள் ... தை பிறக்க ....










3 comments:

Gayathri said...
This comment has been removed by the author.
Gayathri said...

Good job maddy

Unknown said...

hi kavithai miga arumai.